கோயம்புத்தூர் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த ஆனந்த ஆருயராஜ் தற்போது கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவரை அரசு ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.