19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று இந்திய நேரப்படி 11:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டி ஹாங்சோவில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய  பாகிஸ்தான அணி 18 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 17.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் தங்கத்தை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியை நாளை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி.