ஆசிய விளையாட்டில் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு துப்பாக்கிசுடுதலில் மேலும் ஒரு தங்கம் கிடைத்திருக்கிறது. 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி  பிரிவில் இந்தியாவினுடைய பலம் வாய்ந்த வீராங்கனைகளாக பார்க்கக்கூடிய மனு பாக்கர், ஈஷா சிங், ரிதம் சங்குவான் ஆகியோர் இணைந்து 25 மீட்டர் பிரிவில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் தனி பிரிவுக்கான இறுதிப் போட்டிக்கும் மனு பாக்கர், ஈஷா சிங் இருவருமே முன்னேறி இருக்கிறார்கள். இந்திய அணி வென்ற பதக்கங்கள் எண்ணிக்கை இதோடு 16 ஆக உயர்ந்துள்ளது