சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9- ஆம் தேதி இரவு நேரத்தில் பென்சில் பேக்டரி பேருந்து நிலையத்தில் ஒரு மீன்பாடி வண்டியில் சுரேஷ்குமார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த இரண்டு பேர் சுரேஷ்குமாரை ரயில்வே தண்டவாளம் பக்கமாக இழுத்துச் சென்று கல்லால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தண்டையார்பேட்டை சேர்ந்த வினோத்குமார்(30), பாபுலால்(38) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்விரோதம் காரணமாக சுரேஷ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.