நிம்மதியான உறக்கம் கிடைக்க இரவு உணவில் மாற்றம் செய்வதை விட, காலையில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதே சிறந்த வழி என ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா தெரிவித்துள்ளார். பகல் முழுவதும் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாமல் இருப்பதுதான் நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைவதற்குக் காரணமாகிறது.
View this post on Instagram
காலையில் 25 முதல் 35 கிராம் வரை புரதச்சத்து எடுத்துக்கொள்வது பகல் நேர இன்சுலின் அளவை நிலைப்படுத்துவதுடன், நள்ளிரவில் சர்க்கரை அளவு குறைந்து கார்டிசோல் ஹார்மோன் சுரப்பதையும் தடுக்கிறது.
அதிகாலையில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதே பலரை விழித்திருக்கச் செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் அவர், இரவு உணவை ஒரு திருத்தமாகப் பார்க்காமல் அன்றைய வளர்சிதை மாற்றத்தைச் சீராக்க காலை உணவிலேயே புரதச்சத்தை அதிகப்படுத்துவது அவசியம் என வலியுறுத்துகிறார்.
