மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்கப்போகிறது. அதன்படி அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்து மிகப் பெரிய முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி அமைச்சரவையில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் மிகப்பெரிய முடிவை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமானது கிட்டத்தட்ட 4% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு 38% அகவைலைப்படியை வழங்கி வருகிறது. எதிர்பார்த்தவாறு அரசு அகவிலைப்படியை உயர்த்தும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42% ஆக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வின் வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.