கண்ணை நம்பாதே திரைப்படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “மாமன்னன்”. இந்த படத்தை டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வருகிற 29ம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனால் மாமன்னன் டக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாமன்னன் படம் பற்றி கீர்த்தி சுரேஷ் பேசியிருப்பதாவது “மாமன்னன் ஒரு அரசியல் படம் ஆகும். நான் தற்போது படம் நடித்து கொண்டிருக்கிறேன். இதனிடையே அரசியலுக்கு வருவது குறித்து யோசிக்கலாம். இப்படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதனிடையே பிரபல இயக்குனர்கள் ராஜமவுலி, சங்கர் போன்றோர் படங்களில் நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. உதயநிதி மிகவும் ஜாலியான மனிதர்” என அவர் பேசினார்.