மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. முகவில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். தனியார் துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது