பாஜக ஆட்சிக்கு வந்தால் காமராஜர் பெயரில் மாவட்டம் தோறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எதையுமே செய்யவில்லை. அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலைமை உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மாவட்டத்திற்கு இரண்டு நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.