பொதுவாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை வரை மின் தடை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், பிப்.24, 25 மற்றும் 26 (திங்கள்கிழமை ) ஆகிய தேதிகளில் தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின் தடை செய்யப்படாது என்று மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிக்கும் வகையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது