12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களை இந்த ஆண்டே தேர்ச்சி பெற செய்வதற்காக துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தவறினால் தத்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 19 முதல் தேர்வுகள் தொடங்கும்.