முப்படைகளில் அதிகாரி கேடர் பணியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு ஜனவரி 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி மற்றும் பி டெக் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் நிலையில் 457 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.