சென்னை பூந்தமல்லி அருகில் மதுபான விநியோகிக்கும் தனியார் வாகனங்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த நான்கு மாதங்களாக ரூபாய்.4 கோடி வரையிலான கடன் நிலுவைத் தொகையை டாஸ்மாக் தராத காரணத்தால் தனியார் வாகனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.