செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,  தமிழக அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி இல்லைன்னு அண்ணாமலை சொல்வது அதிசயம்… அவரையே அவரை சொல்லிக்கொள்கின்றார்.  மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல்வாதி யாருன்னா……  சோஷியல் மீடியால கழுவி கழுவி கழுவி ஊத்துறாங்க யாருன்னா.…மெச்சூரிட்டி இல்லைன்னு யார் சொன்னார்களோ, அவுங்க தான். ஆளுநர் தொடர்பான வழக்கு  உச்ச நீதிமன்றத்திலேயே  விசாரணையில் இருக்கு. அதனால் அதை சொல்ல கூடாது.

ஆனால் உச்ச நீதிமன்றம் சில விஷயங்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றது. ஆளுநருக்கு என்ன அதிகாரம் ? மாநில அரசாங்கத்திற்கு என்ன அதிகாரம் ? என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. காலை சிற்றுண்டி திட்டம்  அவங்க சம்பாதிக்கிறதுக்கு தான் கொண்டு வந்தாங்க. அந்த திட்டம் கொண்டு வந்ததுக்கு காரணமே அந்த குடும்பம் இன்னொரு தொழிலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்..

காலை  சிற்றுண்டி திட்டம் கொண்டு வந்து, இப்போ தனியாருக்கு கொடுத்து தனியார் நடத்த போறாங்கன்னு சொல்றாங்க… அதேதான் இப்போ எங்களுக்கு ஒரு சந்தேகம். அண்ணா திமுக ஆட்சியில்  பால் கொள்முதல் செய்ததைவிட இன்னைக்கு  10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்து இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் கொடுக்கப்பட்ட பால்….

ஏழை – எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட பால் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. அதிக விலையிலே பால் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஆவினை,  நஷ்டத்திலே தள்ளி….  ஒரு கட்டத்தில் ஆவின் நஷ்டம் அடைந்து வருகிறது. மற்ற தொழிலில் இருக்கின்ற மாதிரி, இதையும் தனியாரிடம் கொடுக்கலாம் என்ற சந்தேகம் இருக்குஎன தெரிவித்தார்.