அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசினார். அதாவது “இன்றைக்கு அதிமுகவின் 51-வது பொன்விழாவை முன்னிட்டு அதிமுகவின் அம்மா பேரவை சார்பாக சமத்துவ சமுதாய திருமண விழா நடைபெறுகிறது என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, கலங்கி போயிருந்தேன், அச்சத்துடன் இருந்தேன். ஏனெனில் தீர்ப்பு எவ்வாறு வரும் என எண்ணி நேற்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன். ஆனால் இன்றைக்கு அம்மா ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோயிலில் வேண்டிக்கொண்ட சில நிமிடத்திலேயே நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அம்மாவின் ஆன்மாவாக அவரது கோயிலில் நம் தலைவர்கள் உண்மையான தெய்வமாக குடிக்கொண்டுள்ளனர்.