அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில் அச்சம் இருந்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுவதாக இபிஎஸ் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ஜெயலலிதா கனவை நினைவாக்க உயிர்மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.