ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பு என கூறப்படும் கவச அமைப்புகளை அமெரிக்கா தற்போது இஸ்ரேலுக்கு அனுப்புகிறது.  போர்க்கப்பல், விமான படைகளை தொடர்ந்து எதிரிகளின் ராக்கெட்டுகளை சுட்டு சுட்டு வகையில்  THAAD அமைப்பானது உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேலின் எல்லைகளில் ஐயான் டோம் இருக்கின்றது. எதிரியினுடைய ராக்கெட் வரும் போது அதனை கண்டறிந்து சரியாக சுட்டு விழுத்தும் வகையில் ஐயான் டோம் சிஸ்டம் இருக்கிறது.

ஆனாலும் அந்த ஐயான் டோமை விட தற்பொழுது அமெரிக்கா அனுப்புகின்ற THAAD என்கின்ற அமைப்பு அதிக வேகத்தோடும், அதிக வீரியத்தோடும் வரும் ராக்கெட்டுகளை உடனடியாக சுட்டு வீழ்த்த வகையில் இந்த THAAD அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்க போர்க்கப்பல் மூலம் தற்போது பென்டகன் அனுப்புவதாக கூறியுள்ளது.

இதுகுறித்து பென்டகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய நாளிலிருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டம் விழாவுகின்றது. தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருவதால் அதனை இஸ்ரேல் ராணுவம் எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பான THAADஐ மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு நாங்கள் அனுப்புகிறோம். போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்கள் அனுப்பப்படும் என கூறுகிறார்கள்.