பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவரிடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு அதையும் மீறி செயல்பட்டு கட்சி பதவிக்கு வர நினைத்தார் பழனிசாமி.

குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பழனிச்சாமி செயல்படுகின்றார். பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது. பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர் அவை தலைவர் நிர்வாகிகள், நியமனம் உள்ளிட்டவைகளில் இருவரும் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே செல்லும்.

ஒருங்கிணைப்பாளர் தேர்வு என்பது கட்சியின் அடிப்படை விதிகளோடு தொடர்புடையது. அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. எடப்பாடி பழனிச்சாமி வசதியாக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளார் என ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றது.