திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, இந்து மதத்திற்கு நாமெல்லாம் விரோதிகள் என்று…. எலக்சன்ல அத தான் சொல்ல போறாங்க. ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்….  எங்களை இந்துக்கள் இல்லை என்று சொன்னால் ? நாட்டிலேயே எவனும் கிடையாது. காரணம் நாங்க தான் மெஜாரிட்டி. கோயிலுக்கு போறவனும் எங்க ஆளுங்க தான் அதிகம். எல்லா கோவிலிலும் கூட்டம்  எப்போ வந்தது ?

திமுககாரன் கோயிலுக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் கோயிலில் கூட்டமே கூடுச்சு. இந்த கூட்டத்தில் பாரு பேருக்கு மேல நெற்றில் திருநீறு வைத்துள்ளான்.. இதுல என்ன தப்பு ? கைல கயிறு கட்டிக்கிட்டு இருக்காங்க? நாங்க என்ன வேணும்ன்னா சொல்லுறோம்.. நான் ஹிந்து இல்லையா ? உங்களை விட அசல் ஹிந்து நாங்க தான்.காரணம் என்னனு கேட்டா ? சாமிக்கும் நாங்க தான் ஒழுங்கா பூஜை பண்றோம். பயபக்தியா நடந்துகிறோம். கோவிலுக்குள்ளே கொலை பண்ணுறவுங்க நாங்க கிடையாது.

கொலை பண்ணுறவன் கோவிலுக்குள்ளே வந்தாலும் வராதே என சொல்ல கூடிய ஒரு வர்க்கம் தான்.. இந்த கட்சி என்பதை மறந்து விடக்கூடாது. கொலை பண்ணுறவன் எல்லாம் உங்க கிட்ட இருக்கின்றான். ஒரு சாமியார்… சாமியார்  என்றால் யார் ? யோக்கியன் என்று தானே அர்த்தம். முற்றும் துணிந்த முனிவன்  என்று தானே அர்த்தம். அவன்  உதயநிதி ஸ்டாலின் உடைய தலையை சீவினால் பத்து கோடி தாரானாம். முதல்ல IT அவன் வீட்டுக்கு போகணும்.ED அவன் வீட்டுக்கு போகணும்.

நம்முடைய செந்தில் பாலாஜி 1 கோடி ரூபாய்க்கு தான் ஊழல் பண்ணினார் என்று சொல்லிட்டு,  நீ ஜெயிலில்வச்சி இருக்க.  10 கோடி ரூபாய் இந்த சாமியாருக்கு எப்படி வந்தது ? ED போகுமா ? தல வெட்டுறதுக்கே…. ஒருத்தர் தல வெட்டுவதற்கு 10 கோடி தர்றானா…  எத்தனை கோடி இவன்கிட்ட இருக்கு ? ஆகவே ஒன்றை மட்டும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.