தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று பல மாவட்டங்களிலும் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.