இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் பைக் நம்பர் பிளேட்களை வித்தியாசமாக அமைத்துக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.   பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதை வழக்கமாகி வருகிறார்கள். நம்பர் பிளேட்டுகளில் எண்களை சாதாரணமாக எழுதாமல் விசித்திரமான முறையில் எழுதுவது, அடையாளம் காண முடியாத அளவிற்கு எண்களை எழுதுவது என்று பலர் நம்பர் பிளேட்களில் டிசைன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை முழுவதும் இன்று முதல் வாகன நம்பர் பிளேட் சோதனையை போக்குவரத்து போலீசார் தொடங்கியுள்ளனர். இதன்படி விதிமுறைகளை மீறி வாகனங்களில் நம்பர் பிளேட் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். சாலைகளில் செல்லும் பைக்குகள் மட்டுமின்றி, பார்க்கிங்குகளில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்குகளையும் போலீசார் சோதனை செய்ய உள்ளனர்.