Airtel தன் பயனர்களுக்காக புது ப்ரீபெய்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் தன் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் இத்திட்டத்தை சேர்த்து உள்ளது. இதன் விலையானது ரூ.289 ஆகும். இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் காலிங் மற்றும் சூப்பரான டேட்டா அனுபவம் கிடைக்கும்.

Airtel-ன் ரூபாய்.289 பிளான் ஒரு புது ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இது 35 தினங்கள் செல்லுபடி ஆகும். இதில் பயனாளர்கள் 4gp டேட்டா, 300 SMS மற்றும் வரம்பற்ற குரலழைப்பு வசதியை பெறுகின்றனர். அதோடு Apollo 24×7 Circle, இலவச Hellotunes மற்றும் இலவச Wynk Music ஆகிய கூடுதல் நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்த தினமும் ரூ.8.25 செலவு ஆகும்.