மதுரை அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின்  சரவணன் பேசினார். இவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, அடுத்து அதிமுகவில் இணைந்து தற்போது வரை ADMKவில் தொடர்கிறார். மருத்துவராக இருக்கும் இவர், தனது மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.

அண்ணன் எடப்பாடியார் முன்னாள் முதலமைச்சர் அவர்களுடைய படத்தை எடுத்து அங்கு வந்த ஒரு குழந்தையிடம் காமிக்கிறேன். அந்த பொண்ணு சொல்லுச்சு பாருங்க. உண்மையிலே கண்ணு கலங்கி போயிருச்சு.  அந்த நேரத்துல இவரு எங்க அப்பாவை காப்பாத்தினவரு. எங்க அம்மா சொல்லுச்சு சாமி அப்படின்னு… சொல்லிட்டு,  அவர் படத்தை தொட்டு கும்பிட்டுச்சு அந்த பொண்ணு.

நான் வந்து மற்ற மருத்துவமனை மாதிரி வெளியே டோக்கன் போட்டு ஒவ்வொருத்தரா வந்து என்னை ரூமுக்குள்ள பார்க்க மாட்டாங்க. மற்ற மருத்துவமனையில் டாக்டர் தனி தனியா பார்ப்பாங்க ரகசியமா ஒரு 500 ரூபாய் பீஸ் வாங்கி,  300 பீஸ் வாங்கிட்டு போவாங்க. அப்படி இருக்காது. என்னை சுற்றி ஒரு 10,  50 பேரு சுத்தி நிப்பாங்க.

மொத்தமா உட்கார வைத்து தான் கதையை கேட்டுக்கிட்டு இருப்பேன். அப்ப அந்த பொண்ணு சொன்ன உடனே அங்க இருக்க பெண்மணிகளுக்கு எல்லாம் கண்ணுல கண்ணீர் வந்துட்டு.  நிறைய பேரு அந்த பாப்பா உண்மையத்தான சொல்லுச்சு அப்படிங்கறாங்க. அந்த அளவுக்கு இன்னைக்கு தமிழகம் தமிழகமாக இருப்பதற்கு காரணம் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தான் என தெரிவித்தார்.