தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பிறகு கோபாலபுரத்தின் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினால் போதும் என முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

திடீரென அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க தான் இறந்த பிறகு என் கல்லறையில் கோபால புரத்தின் விசுவாசி உறங்குகிறான் என எழுத சொன்னது சபையில் இருந்தவர்கள் மத்தியில் சற்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும் இதைக் கேட்ட சபாநாயகர் அப்பாவு நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்வீர்கள் என அமைச்சர் துரைமுருகனுக்கு ஆறுதல் கூறினார்.