எம்ஜிஆர் நடித்து வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்த ஐம்பது வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியிலுள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களிடம் பேசியதாவது “ஜமின்தார் முறையில் திமுகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது. தனக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும் என்பதற்காகவே அதற்கேற்றார் போன்று முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார். மேலும் பிடிஆர், ஆவடி நாசர் போன்றோரை அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனினும் வந்தால் அங்கீகரிப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.