வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

சென்னையில் அஇஅதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் பதவியை இபிஎஸ் ஏற்பதை தடுக்க ஓபிஎஸ் தரப்பு தொடுத்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதனால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.