பிரபல திராவிட இயக்க எழுத்தாளரும், பெரியாரிய சிந்தனையாளருமான மங்கள முருகேசன் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், சுயமரியாதை சிந்தனை மிளிரும் ஏராளமான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தவர் மங்கள முருகேசன் என்று கூறியுள்ளார். மங்கள முருகேசன் 150-க்கும் அதிகமான நூல்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோர் வழியில் மாறாது நின்று அவர்களது கொள்கைகளை எந்நாளும் பிரதிபலித்தவர். தமது நுண்மாண் நுழைபுலம் செறிந்த உரைகள் வாயிலாக கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே பகுத்தறிவு பேரொளியைப் பரவச்செய்த தலைசிறந்த கல்வியாளர்தான் பேராசிரியர் மங்கள முருகேசன்.