இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கிய வீட்டுக் கடன்கள் தொடர்பாக ஆண்ட்ரோமேடா என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கடந்த வருடம் 34 லட்சம் வீட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த 34 லட்சம் வீட்டுக்கடன் மதிப்பு 9 லட்சம் கோடி ஆகும். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டை விட 2022-ம் ஆண்டு 18 சதவீதம் வரை வீட்டு கடன்களின் மதிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோன்று தனிநபர் கடன்களும் கடந்த 2021-ம் ஆண்டு காட்டிலும் கடந்த வருடம் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.

அதன்படி தனிநபர் கடன்களின் வளர்ச்சி 57 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் வழங்கப்பட்ட தனிநபர் கடன்கள் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் பிறகு சிறு கடன்களின் சந்தை மதிப்பும் 100 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தத் துறையில் மட்டும் 54 கோடி கடன்கள் செயல்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள் வழங்குவதில் தனியார் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கி இரண்டுமே நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.