பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். பலர் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தாலும் உலக அழகி என்று சொன்னால் இன்றுவரை முதலில் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின் ஆக உயர்ந்தார். தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2 படத்தில் பலர் நடித்திருந்தாலும் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. ஒரு படத்திற்கு ஐஸ்வர்யா ராய் 12 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இது போக பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன்  இரண்டாம் பாகத்தில் நடிக்க 10 கோடி வரை ஐஸ்வர்யா ராய் சம்பளமாக பெற்றுள்ளார்.

இந்நிலையில் பல விலை உயர்ந்த பங்களாக்கள், ஆடம்பர கார்கள் மற்றும் நிலங்கள் ஒன்று பல சொத்துக்களை வைத்துள்ள ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு 776 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆராத்யா என்ற ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.