பிரபல இயக்குனர் மணிரத்தினம் அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் இரண்டு பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 28-ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸ் ஆகி 10 நாட்களை கடந்த நிலையில் தற்போது வசூல் விவரம் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 300 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.