தமிழ் சினிமாவில்‌ 90’ஸ் காலத்தில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் தேவயானி. இவர் நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடித்த காதல் கோட்டை படம் பற்றி பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். அதாவது நடிகை தேவயானிக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் காதல் கோட்டை படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த படம் வெற்றி பெறாவிட்டால் சினிமாவை விட்டு விலக வேண்டும் என தேவையானி முடிவு செய்துள்ளார்.

காதல் கோட்டை படத்திற்காக நடிகை தேவயானி கடுமையாக உழைத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து தேவயானிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. மேலும் ஒரு காலத்தில் ரசிகர்களின் போவரைட் ஹீரோயினாக வலம் வந்த தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது  இத்தம்பதிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.