தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ரஜினி தன் 170-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். அதன் பிறகு லைக்கா நிறுவனம் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக தகவல் வெளியானது.

இதுதான் நடிகர் ரஜினியின் கடைசி படம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்காரா தற்போது நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவேளை சுதா கொங்காரா இயக்கத்தில் ரஜினி நடித்தால் தலைவர் 172 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்களாம் என்று கூறப்படுகிறது. மேலும் சினிமாவில் இருந்து விலகுவதாக நடிகர் ரஜினி அறிவித்த நிலையிலும் கதை கேட்டு வருவதால் தொடர்ந்து வெள்ளித்திரையில் அவரை பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.