தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 படம்  10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பவானி ஹீரோயினாக நடிக்கும் நிலையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் என்ற திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தின் சூட்டிங் இதுவரை தொடங்கப் படவில்லை.

வாடிவாசல் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு எதற்காக தாமதம் ஆகிறது என்ற காரணத்தை தற்போது படத்தில் நடிக்கும் நடிகர் தமிழ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, வாடிவாசல் படத்தின் மேக்கிங் வீடியோவை எடுக்கும்போது காளை ஒன்று என்னை முட்டி தள்ளியது. இதேபோன்று சூர்யா சாரையும் காளை மாடு முட்ட சென்றது. இதனால் இயக்குனர் வெற்றிமாறன் காளை மாடுடன் நன்றாக பழகிய பிறகு சூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

வாடிவாசல் படத்தில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் சூர்யா சாருக்கு சொந்தமானவை தான். சூர்யா சார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காளைகளுடன் ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் படத்தின் சூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும் என்று கூறியுள்ளார். வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில் தயாரிப்பாளர் படம் கைவிடப்படவில்லை என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது வாடிவாசல் படத்தின் அப்டேட் கிடைக்காத என்று காத்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் தமிழ் சொன்ன செய்தி சற்று மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது