தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு தலைவர் நாசர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு அறிக்கையை துணைத்தலைவர் தலைவர் கருணாஸ் அவர்கள் தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  அவர் வராத நிலையில் அவருக்கு பதிலாக நடிகை கோவை சரளா ஆண்டறிக்கையை தாக்கல் செய்கிறார். இதைத்தொடர்ந்து பொதுக்குழு சங்கத்தினுடைய பொருளாளர் கார்த்தி  வரவு செலவு தாக்கல் செய்தார்.

இதில் சென்னையில் சுற்றுலா பணிகளை கவரும் வகையில் நடிகர் சங்க கட்டிடம் உருவாக்கப்படும் என செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும்  நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் அதுவரை நான் திருமணத்திற்காக காத்திருப்பேன்.  நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு முதல் நிகழ்ச்சியாக எனது திருமணம் நிகழ்ச்சி தான் எனவும் விஷால் தெரிவித்தார்.