ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக பிரபலமானவர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்திற்கு பின் சாஹா மற்றும் ராதே ஷ்யாம் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த இரு படங்களும் எதிர்பார்த்து அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதி புரூஷ், சலார் ஆகிய திரைப்படங்கள் உருவாகி திரைக்கு வர இருக்கிறது. சலார் திரைப்படத்தை கே ஜி எஃப் இயக்குனர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது ஹைதராபாத்தில் உள்ள பிரபாஸின்  பிரம்மாண்டத் தோட்டம், நீச்சல்குளம், ஒரு விளையாட்டுப் பகுதி மற்றும் உள் உடற்பயிற்சி கூடம் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்ட பண்ணை வீடு அனைவராலும்  பேசப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் மதிப்பு 60 கோடிக்கும் மேல் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 84 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு ஒரு பண்ணை வீடும் இருக்கிறது.  அரசியல் வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும்  அந்த பண்ணை வீட்டில் தான் பிரபாஸ் அதிக நேரம் செலவிடுவாராம். ஏனென்றால் அவருக்கு அந்த வீடு மகிழ்ச்சியை கொடுக்கும் என அவர் அடிக்கடி கூறுகிறார்.