முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றதாக சமூகவலைத்தளங்களில் அவர் தெரிவித்துள்ளார். அனைவரின் ஆசியுடன் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், கூடிய விரைவில் அனைவரின் முன் வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுஷ்மிதாவுக்கு ஸ்டண்ட் வைக்கப்பட்டு உள்ளது. அண்மை காலமாக அனைவருக்கும் மாரடைப்பு வருவது கவலை அளிக்கிறது. ஆகவே உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.