தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் பல வருடங்களுக்கு முன்பாகவே மீடியாக்கள் முன்னிலையில் வருவதையும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் நிறுத்திவிட்டார். அதன் பிறகு நடிகர் அஜித் ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை. அஜித் ஏன் திடீரென மீடியாவில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்ற காரணம் பலருக்கும் தெரியாது. இதற்கான காரணத்தை தற்போது பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். அதாவது நடிகர் அஜித் சினிமா கலைஞர்களுக்காக எந்த இடத்திலும் துணிச்சலாக குரல் கொடுப்பாராம். அதன் பிறகு சினிமாவிற்குள் அரசியல் வேண்டாம்.

சில முக்கிய பிரமுகர்கள் பொது விழாக்களுக்கு எங்களை மிரட்டி வரவழைக்கிறார்கள். சினிமா மற்றும் அரசியலை ஒன்று சேர்க்காதீர்கள் என கலைஞர் கருணாநிதியின் முன்பாகவே நடிகர் அஜித் தைரியமாக பேசினாராம். இதனால் நடிகர் அஜித்துக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. திரை உலகிற்காக பேசிய நடிகர் அஜித்துக்கு பக்கபலமாக ஒருவர் கூட வரவில்லை. இதனால் மனமுடைந்து போன அஜித் மீடியாக்களில் இருந்தும், பொது நிகழ்ச்சிகளில் இருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.