பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இருந்து பெஷாவர் பகுதியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் சுமார் 30 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்து சிந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக நொறுங்கியது. இதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.