ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது இனி திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டுக்கு ஆதார் அட்டை இனி கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் இனி வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் பெற முடியாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.