டெல்லி மெட்ரோ ரயிலில் சமீப காலமாக ஆபாசமான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டது தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து டெல்லி மகளிர் அணி போலீசாரிடம் புகார் கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதாவது டெல்லி மெட்ரோ ரயிலில் தரையில் ஒரு காதல் ஜோடி அமர்ந்துள்ளது.

அந்த வாலிபரின் மடியில் இளம் பெண் படுத்துக்கிடக்க அந்த வாலிபர் அவருக்கு முத்தம் கொடுத்து கொண்டே இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகமும் பதில் அளித்துள்ளது. அதாவது பொது இடங்களில் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க வேண்டும் எனவும் இது போன்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

https://twitter.com/SonOfChoudhary/status/1655839386230194177?s=20