உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன் குடும்பத்துடன் வேலை தேடி டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்ற போது ரவீந்திர குமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றியுள்ளார். அதன்பிறகு போதைக்கு அடிமையான ரவீந்திர குமார் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு 6 வயது சிறுமியை ரவீந்திர குமார் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சிறுமியின் கழுத்தை எடுத்து கழிவுநீர் ஓடையில் வீசியுள்ளார். ஆனால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் அவர் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் ரவீந்திரகுமாரை தேடி வந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ரவீந்திர குமார் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு ஒரு இடத்தில் ஒரு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பிறகு அதே இடத்திற்கு செல்லாமல் 40 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்று வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.‌ அவரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.