கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா. இவருடைய மனைவி சாச்சி மர்மா. இவர் கடந்த சனிக்கிழமை கிர்த்தி நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்கள் அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை சாச்சி மர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அவர் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது இரு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சைட்னயா சிவம் (18), விவேக் (18) என்பது தெரியவந்தது. இவர்கள் எதற்காக காரின் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்..