
ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு ரொம்ப பிஸியாக இருக்கின்றார். இவர் தற்போது ரவுடி பேபி, கார்டியன், அரண்மனை 4-ம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி திரைப்படத்தில் நடித்து வருகின்ற நிலையில் திருமணத்திற்கு பிறகு காந்தாரி திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தற்போது ஹன்சிகா ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து விட்டார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கின்றார். அவருடன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.