ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரசார களமாக வழிபாட்டு தலங்களை பயன்படுத்த கூடாது என்று அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசார களமாக வழிபாட்டு தலங்களை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தேர்தல் நடத்தை விதிமுறை பிரிவுகள் தடை செய்துள்ளன. மீறினால் அபராதத்துடன் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளது.