திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விரைவு தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. இதன்படி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஜனவரி 12-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரைக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, https://tirupathibalaji.ap.gov.in/என்ற இணையதளத்தின் மூலமாக பக்தர்கள் இதனை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more