டாஸ்மாக் நிறுவனத்தில் அரசு எத்தனையோ நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தாலும், அங்கிருக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பின்மையால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகின்றன.

முறைகேடுகளைத் தடுக்க அரசு தனது நேரத்தையும், ஆற்றலையும், நிர்வாக வளங்களையும் மீண்டும் மீண்டும் ஒரே பிரச்னைக்காக விரயம் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் விற்பனைப் நடைமுறைகளைச் சீரமைக்க அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டாலும், உள்நிலை அதிகாரிகளும் ஊழியர்களும் அந்த மாற்றங்களைச் செயல்பட விடாமல் தடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.தொடர்ந்து ஒரே விதமான புகார்கள் எழுந்தால், டாஸ்மாக் நிர்வாகத்தைப் படிப்படியாகத் தனியார்மயமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசே டாஸ்மாக்கை நடத்த விரும்பினால் கூட, தற்காலிகமாகச் சில மாதங்களுக்குத் தனியார் மாதிரியை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். அதில் கிடைக்கும் நல்ல முடிவுகளை ஆய்வு செய்து, கடுமையான பொறுப்புக்கூறலுடன் கூடிய புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கலாம். தமிழகத்தில் இதைவிடக் கவனிக்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் பல இருக்கும்போது, டாஸ்மாக் அமைப்பிற்குள்ளேயே அரசு தனது முழுச் சக்தியையும் விரயம் செய்வது சரியாக இருக்காது.

“>

 

முறைக்கேடுகளைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு அமைப்பைத் தொடர்ந்து சீரமைக்க முயல்வதை விட, புதிய மற்றும் வெளிப்படையான நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவருவதே சரியான தீர்வாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.