இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டு லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட் தொடரில் ஹாம்ஷைர் மற்றும் சசெக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து வீரர் டோபி அல்பெர்ட் தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகைக் கவர்ந்துள்ளார். இந்தப் போட்டியில் களமிறங்கிய அவர், பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்யும் வகையில் மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களை பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்த அதிரடி ஆட்டத்தின் உச்சக்கட்டமாக, டோபி அல்பெர்ட் தான் எதிர்கொண்ட தொடர்ச்சியான ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். எனினும், இந்த ஆறு சிக்சர்களும் ஒரே ஓவரில் அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சசெக்ஸ் அணியின் பந்துவீச்சாளர் வீசிய ஓவரில் இரண்டு சிக்சர்களையும், அடுத்த ஓவரில் ஆலி பந்துகளில் நான்கு சிக்சர்களையும் பறக்கவிட்டு அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
Some grab from Toby Albert sprinting in 😮💨😮💨😮💨 https://t.co/I2oZSi0gwj pic.twitter.com/mdjzN2YZCS
— Hampshire Cricket (@hantscricket) August 9, 2026
போட்டியின் நடுவே களமிறங்கிய அவர், வெறும் 37 பந்துகளிலேயே 5 பவுண்டரிகள் மற்றும் 8 ராட்சத சிக்சர்கள் உட்பட அதிரடியாக 86 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் ஹாம்ஷைர் அணி மிகப்பெரிய ரன் எண்ணிக்கையை எட்ட உதவினாலும், இறுதியில் சசெக்ஸ் அணி அந்த இலக்கை வெற்றிகரமாகத் தாண்டி வெற்றி பெற்றது. எதுவாயினும், டோபி அல்பெர்ட்டின் இந்த அதிரடியான தொடர்ச்சியான ஆறு சிக்சர்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
