ரயில் பயணத்தின் போது இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சக பயணிகளால் கடுமையாகத் தாக்கப்படும் திடுக்கிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கடும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு ரயில் பயணங்களில் இத்தகைய அவமானம் இழைக்கப்பட்டிருப்பது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பரவி வரும் தகவல்களின்படி, ரயிலில் பயணம் செய்த எம்.எஸ்.எஃப்  பாதுகாப்புப் படை வீரருக்கும் சில பயணிகளுக்கும் இடையே இருக்கை ஒதுக்கீடு தொடர்பாகச் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிரச்சினையைப் பேசித் தீர்க்க முற்படுவதற்குப் பதிலாக, திரண்ட பயணிகள் சிலர் அந்த வீரரைச் சூழ்ந்துகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறு தவறோ அல்லது புரிதல்களோ இருப்பின் அவற்றை ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தோ அல்லது அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமாகவோ தீர்த்திருக்க வேண்டும்; மாறாக வன்முறையைக் கையாள்வது எதற்கும் தீர்வாகாது என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

“>

 

தேசத்திற்காகத் தங்களது உழைப்பைக் கொட்டும் பாதுகாப்புப் படையினரைத் தாக்கியவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுவெளியில் அனைவரும் ஒருவருக்கொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.