எந்தவொரு சுயநலமும் கபடமும் இல்லாத மாசற்ற மழலை மனதுடன், மூன்று அழகிய குழந்தைகள் கன்றுக்குட்டியுடன்  ஒன்று சேர்ந்து பேரன்போடு விளையாடும் நெகிழ்ச்சியான காட்சி தற்பொழுது இணையத்தில் வெளியாகி சோஷியல் மீடியா பயனர்களின் இதயங்களை அப்படியே கொள்ளையடித்து வருகிறது.

சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் அந்த கியூட் காணொளியில், மூன்று சுட்டிகளில் ஒரு குழந்தை, மரத்தொட்டிலில் படுத்திருக்கும் ஒரு கன்றுக்குட்டிக்கு ஆசையாகத் தொட்டிலாட்டித் தூங்க வைக்க முயலும் எதார்த்தமான காட்சி பார்ப்பவர்களின் முகத்தில் உடனடியாகப் புன்னகையை வரவழைக்கிறது.

இந்த எளிய, அதே சமயம் ஆகச்சிறந்த பேரன்புகொண்ட தருணத்தை இணையத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “விலங்குகளுக்கு  நாம் ஒரு மடங்கு பாசம் காட்டினால், அது  நமக்கு கைமாறாகப் பத்து மடங்கு தூய்மையான அன்பைத் திருப்பித் தருவார்கள்; அவைகளிடம் எந்தவொரு சுயநலமும் இருப்பதில்லை” என்று உருகிப் பாராட்டி வருகின்றனர்.

 

“>

பார்ப்பவர்களின் மன அழுத்தத்தை நொடியில் போக்கும் இந்த நேர்மறையான பதிவு தற்பொழுது இணையப் பக்கங்களில் அன்பின் அசல் அடையாளமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.