தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக – அதிமுக மோதல் தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், குதிரை பேரம் என்ற புகாராக வெடித்துள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை, 1993-ஆம் ஆண்டு நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ஜே.எம்.எம் (JMM) எம்பிக்களை வளைத்ததற்காக அன்றைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் பூட்டா சிங் மீது சிபிஐ வழக்கு பாய்ந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே பாணியில், அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் குறுக்கு வழியில் இழுத்ததற்காக முதலமைச்சர் விஜய் மீதும் சிபிஐ வழக்கு பாய அதிக வாய்ப்புள்ளதாக அவர் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கிளம்பியுள்ள இந்த ‘சிபிஐ அஸ்திரம்’, தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

“>